Header Ads



பொதுவேட்பாளருக்கே ஆதரவு - ஐக்கிய பிக்குகள் முன்னணி

நாட்டில் ஜனநாயகத்தினை ஏற்படுத்தி சர்வாதிகாரத்தை ஒழிக்க பொதுவேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம் என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பு தேசிய நூதனசாலை மண்டபத்தில் ஐக்கிய பிக்குகள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது கினாவே ஆனந்த அனுநாயக்க தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த அரசின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். 

நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையினை நீக்க வேண்டும்.

நாட்டில் ஜனநாயகத்தினை ஏற்படுத்தவேண்டும் என்பதனையே ஆரம்பத்தில் இருந்து நாம் தெரிவித்து வந்தோம். அனால், எதுவும் இதுவரை நடைபெறவில்லை.

இவை நடைபெற ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால ஆறிசேனவுக்கு ஆதரவு வழங்கி பொது எதிரணியினை வெற்றிபெறச் செய்வோம்.

மேலும், இராணுவ கட்டுப்பாட்டினையும் அடக்குமுறையையும் தாண்டி பொது எதிரணியினை ஆதரிக்க வேண்டியுள்ளது.

எனவே, பொது வேட்பாளரின் வெற்றிக்காக சகல மட்டத்திலும் மக்களை அணிதிரட்டி பொது எதிரணியின் வெற்றிக்காக சகல வழிகளிலும் செயற்படுவோம் என்றார்.

No comments

Powered by Blogger.