Header Ads



கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31-10-2014 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதிநிதி அ.செல்வேந்திரனினால் சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.

No comments

Powered by Blogger.