Header Ads



சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வந்த விமானத்தில் இலங்கையர் திடீர் மரணம்

சிங்கப்பூரில் இருந்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையரொருவர், திடீரென அவ்விமானத்தினுள் மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பொல்காவலையைச் சேர்ந்த 57 வயது நபரொருவரே இன்று அதிகாலை 1.35 மணியளவில் திடீரென சுகயீனமுற்ற நிலையில் இவ்வாறு  விமானத்தினுள் மரணமாகியுள்ளார்.

பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.