Header Ads



எதுவித நிபந்தனைகளுமின்றி அரசுக்கு முழு, ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

(மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

அடுத்த வருட (2014) வரவு- செலவுத் திட்டத்துக்கான வாக்களிப்பின் போது எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென இன்றிரவு (31-10-2014) கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, கருத்தறிந்தே தீர்மானம் மேற்கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் கலந்து கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.

2 comments:

  1. முஸ்லிம்களின் எதிர்காலாத்தை பற்றி அக்கறையில்லாத முஸ்லிம்காங்கிரஸோ, அல்லது பசீர் சேகுதாவுதோ சுயமாக எடுக்கும் முடிவுகள் ஒன்றும் முஸ்லிம் சமூகத்தின் முடிவாக இருக்காது. இதுபோன்ற முடிவுகள் மேற்குறிப்பிட்ட நபரது அல்லது கட்சியனது சொந்த இலாபத்துக்காக எடுக்கப்பட்ட முடிவுகளாகவே கருதப்படும். அத்துடன். இது சம்மந்தமான தீர்கமான விபரங்கள் திரட்டப்படவேண்டும். இதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்களை முஸ்லிம்கள் ஒருபோதும் அனுசரித்து நடக்கவேண்டியதில்லை. முஸ்லிம்களின் வாக்குகளும் கிடைக்காது காரணம் நிபந்தனையற்ற வகையில் எமது சமுதாயத்தை விற்று உமது சுய இருப்புகளை உறுதிப்படுத்தும் உம்மைப்போன்ற பச்சோந்திகள். சமுதாயத்திலிருந்து தூக்கி வீசப்படவேண்டும்.

    2015 பட்ஜட்டில் வடக்கு கிழக்கிற்கு என்ன நலவை அரசாங்கம் வைத்துள்ளதென்று தமிழர்கள் கேட்கின்றார்கள். ஆனால் நாம் வாக்கழித்தவர்கள், வாய்திறந்தால் நிபந்தனையற்ற முறைதான் காரணம் சொல்லவேண்டியதில்லை

    ReplyDelete

  2. Typed with Panini Keypadஉ
    உண்மையான கருத்தை கூறினீர்கள்
    இது இவர்களின் சுயலாபத்துகாகவே இந்த முடிவை எடுத்திருக்கின்றார்கள் ,
    இன்ஷா அல்லாஹ் இவர்களுக்கு எமது மக்கள் நல்லதொரு பாடத்தை கற்பிக்கவேண்டும் இந்த தேர்தலில்

    Typed with Panini Keypad

    Typed with Panini Keypad

    ReplyDelete

Powered by Blogger.