Header Ads



முஸ்லிம் காங்கிரஸை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை. சில ஊடகங்களே குற்றவாளிக்கூண்டில் முஸ்லிம் காங்கிரஸை நிறுத்துவதற்கு முனைந்துள்ளன என முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் உறுதிப்படக்கூறினார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 6ம் கட்டப் பிரதான ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் நவம்பர் 19ம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் திகதி எந்நேரமும் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்பதையிட்டு தீர்மானம் எடுக்கக்கூடிய பலமும் சக்தியும் கொண்ட கட்சியாகவே  திகழ்ந்து வருகின்றது.

எனினும் இன்றுவரை ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்பது பற்றி எந்தவொரு தீர்மானமும் எடுக்காத நிலையில் சில பத்திரிகைகளும் சில இணையங்களும் தமது அஜந்தாக்களுக்கேற்ப உண்மைக்குப் புறம்பாக இதுபற்றி செய்திகளை  வெளியிட்டு வருகின்றன.

சில வார வெளியீடுகளின் பத்தி எழுத்தாளர்கள் மனம்போன போக்கில் இந்த விடயத்தில் தமது அபிலாஷைகளுக்கேற்ப கட்டுரைகளை வெளியிட்டு முஸ்லிம் காங்கிரஸை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முனைந்துள்ளனர்

3 comments:

  1. குற்றவாளிக்கூண்டில் இனிமேல் ஏற்றவேண்டிய தேவை கிடையாது பல நூறு பாரிய குற்றம்களை செய்து முஸ்லிம் சமூகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்திய பயங்கர குற்றவாளிகளாகவே முஸ்லிம் சமூகம் உங்களை பார்கின்றது ?
    கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் செய்த மகா கொடுமைகளை மக்கள் மறக்கவில்லை?

    ReplyDelete
  2. மக்கள் ஆதரவு உமக்குத்தேவையென்றால் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள மேல் மட்ட கீழ்மட்ட மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் உமது மனச்சாட்சிக்கு எதிராக நடப்பதைவிட்டும் தவிர்ந்து கொள்ளும். தமிழர்களின் ஒற்றுமையைகண்டு நீர் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ளும். ஒருவரை ஒருவர் வசை பாடுவதை நிறுத்தும் காசுக்காய செயல்படுவதை நிறுத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.