Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக, சிங்கள பௌத்தர்களை அணி திரட்ட வேண்டும்

சம்பந்தன், தொண்டமான் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கட்சிகளுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்களை அணி திரட்ட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற சிங்கள வர்த்தகர் முன்னணியினால் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பேரம் பேசும் பலத்தை சிதறடிக்கச் செய்ய வேண்டும்.

பத்து லட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை ஆயத்தம் செய்வதன் மூலம் சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் பலத்தை வலுவிழக்கச் செய்ய முடியும்.

2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருடன் புதிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

சிங்கள பௌத்த கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலைவர் ஒருவருக்கே ஆதரவளிக்கப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.