IS குறித்து பிரிட்டன் இஸ்லாமிய அறிஞர்களின் அதிரடி 'பத்வா'
பிரிட்டனில் வாழும் ஏராளமான முஸ்லிம்கள், மேற்காசிய நாடுகளில் கொடுமைகள் செய்து வரும், ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும், ரகசியமாக சென்று சேர்வதையும் அறிந்த, பிரிட்டன் முஸ்லிம் மதகுருமார்கள், அதை தடை செய்து, 'பத்வா' உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
லண்டன், மான்செஸ்டர், லீட்ஸ், பர்மிங்ஹாம், லெய்செஸ்டர் நகரங்களைச் சேர்ந்த முஸ்லிம் குருமார்கள் நேற்று பிறப்பித்துள்ள மத உத்தரவில், 'ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகள் கொடூரமானவர்கள். அவர்களுக்கு பிரிட்டன் முஸ்லிம்கள் எவ்வித ஆதரவையும் அளிக்கக் கூடாது; அவ்வாறு செய்வது மத துரோகமாக கருதப்படும்' என, தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் உளவுத்துறை:மற்றும் போலீசார், ஐ.எஸ். ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்த பிரிட்டன் முஸ்லிம்கள் யார் என, பட்டியல் தயாரித்து, அவர்களின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்து வருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், ஐ.எஸ். ஐ.எஸ்., வாதிகள் அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment