Header Ads



''சேறு பூசாதீர்கள்'' மேர்வின் சில்வாவிடம் பகிரங்க மேடையில் கூறிய ஜனாதிபதி மஹிந்த


சேறு பூசும் வகையில் மேடைப் பேச்சுக்களை நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க மேடையில் மக்கள் மத்தியில் வைத்து, பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மொனராகல் மதுல்ல என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்புபடுத்தி எவரையும் விமர்சனம் செய்வதோ அல்லது சேறு பூசும் வகையில் கருத்து வெளியிடுவதோ நாகரீகமான செயல் அல்ல என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுரமா திஸாநாயக்க தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்திற்கு, ஜனாதிபதி உடனடியாக எதிர்பை வெளியிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இவ்வாறான உரைகளை எதிர்வரும் காலங்களில் ஆற்றப் போவதில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்து, தமது உரையைத் தொடர்ந்திருந்தார்.

No comments

Powered by Blogger.