கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்..?
(GTN)
இந்திய புலனாய்வு அமைப்புகளின் கவனம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை நோக்கி திரும்பியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று பாதுகாப்பு துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கடந்த 10 மாத கால பகுதியில் பாக்கிஸ்தானிற்காக வேவு பார்த்த மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தீவிரவாத மயப்படுத்தப்படுவது குறித்தும், பாக்கிஸ்தான் அவர்களை பயன்படுத்த முனைவது குறித்தும் புலனாய்வு அமைப்புகளின் கவனம் திரும்பியுள்ளது.
இந்திய அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர் ஒரு இலங்கை தமிழர் என்கின்ற போதிலும் ஏனைய இருவரும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இந்த பகுதியிலிருந்து இளைஞர்களை பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்தியாவிற்க்கு எதிரான நடவடிக்கைகளுக்காக திரட்டிவருவதாகவும், லக்ஸ்ஹர் இ.தொய்பா இலங்கையில் தளமொன்றை அமைத்துள்ளதாகவும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரளவு செல்வாக்கு அந்த அமைப்பிற்க்கு உள்ளதாகவும் இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பிட்ட பகுதி கடந்த சில தசாப்தங்களாக இன ரீதியான பதற்றங்களை சந்தித்துள்ளது, பாக்கிஸ்தான் இதனை பயன்படுத்துகின்றது, இந்தியாவிற்க்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, காத்மண்டு, துபாய், பாங்கொக், கொழும்பு ஆகியவற்றை பாக்கிஸ்தான் தளமாக பயன்படுத்துகின்றது அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவின் அணு உலைகள் குறித்த தகவல்களை திரட்டவே கொழும்பை அதிகளவிற்க்கு பாக்கிஸ்தான் பயன்படுத்துகின்றது, இந்திய அணுஉலைகள் பெருமளவிற்க்கு தென்னிந்தியாவிலிருப்தே காரணம் என மேலும் தெரிவிக்கும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் எனினும் தற்போது தாக்குதல் திட்டங்களும் கொழும்பிலிருந்து தீட்டப்படுவது சமீபத்தைய கைதுகள் மூலமாக தெரியவந்துள்ளது, இதுவே கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளன.
சிறுபானமையினரை அடக்கி ஒடுக்கி பொருளாதார ரீதியாக சீரழித்து வழவைக்கவேண்டுமென்பதுதான் இலங்கையிலுள்ள பல பிரபல்யங்களின் அவா. மற்ற நாடுகளை அவர்கள் கவனிக்கவில்லையா? தன் நாட்டின் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது நாட்டிற்க்கு நல்லது என்பதை புரியாதவர்கள் பலர் நம் நாட்டில் பிணங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
ReplyDelete