Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்து குழிபறிக்கும் துரோகிகள்...!

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசு வெளியேற்றாமல் அவர்களாகவே அரசிலிருந்து வெளியேறச் செய்யக் கூடியதான அழுத்தங்களையும் ஆலோசனைகளையும் அந்தக் கட்சியின் தலைமைக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தின் சில சிரேஷ்ட அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

அரசின் ஏகோபித்த ஆதரவின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை சில சிங்கள அமைச்சர்கள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றினால் ஏற்படக் கூடிய மோசமான விமர்சனங்கள் மற்றும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே அவர்களாக வெளியேறக் கூடியதான முயற்சிகளை அந்த அமைச்சர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் இந்த நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக குறித்த அமைச்சர்கள் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இருவருடன் அண்மையில் இரகசியக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் இதோ...,

1.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை அரசிலிருந்து வெளியேறுமாறு அழுத்தங்களையும் தொந்தரவுகளையும் கொடுத்தல்.

2. இந்த விவகாரத்திரல் கட்சியின் அரசியல் உயர்பீட மட்டத்தில் காய் நகர்த்தல்களைச் செய்து அமைச்சர் ஹக்கீமை அரசிலிருந்து வெளியேறுவதற்கான இணக்கத்தைப் பெற்று அதனை உடன் நடைமுறைப்படுத்தல்.

3. தேவைப்படின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள், அல்லது அமைச்சர் ஒருவர் இன்றேல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் அல்லது எம்பிக்களில் சிலர் நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து தாங்கள் அரசுடனான உறவைத் துண்டித்துக் கொண்டதாக தெரிவிப்பதன் மூலம் அமைச்சர் ஹக்கீமுக்கு அழுத்தங்கள் கொடுத்தல்.

4. அவ்வாறு அனத்தும் சரியாக நடந்து முடிந்து சில காலம் சென்றதன் பின்னர் அமைச்சர் ஹக்கீமுடன் வேண்டுமென்றே முரண்பட்டு மீண்டும் ஆளுங்கட்சிக்கு மாறி விடுதல். அவ்வாறு மாறும் பட்சத்தில் அவர்களில் ஒருவருக்கு முழு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பினையும் இருவருக்குப் பிரதியமைச்சர் பதவிகளையும் வழங்குதல்.

5. இதன் பின்னர் அமைச்சர் ஹக்கீமை அந்தக் கட்சியின் தலைமையிலிருந்து நீக்கும் வகையில் சதிகளைச் செய்து அவரை நீக்கியவுடன் மீண்டும் புதிய தலைமையின் கீழ் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கொள்ளல் போன்றன தொடர்பில் இங்கு கருத்துரைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த விடயங்களை கச்சிதமாக நிறைவேற்றுவதற்கான ஒப்புதலையும் விருப்பத்தையும் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த அந்த இரு முக்கியஸ்தர்களும் அங்கு தெரிவித்துள்ளனர். 

2 comments:

  1. you should publish their name so, our community could recognize this stupid persons and give them nice teaching on future.

    ReplyDelete
  2. Assalamu Alaikum
    Oh Muslims in Sri Lanaka!!!!

    PLEASE UNITE TOGETHER BEYOND THE FACTION TO SAVE THE PARTY.

    Sri Lanka Muslim Congress is our valuable property which was gifted by Allah.
    And also this the time to extend our strong support to our party leadership accomplish this huge challenge from government side against the Muslim community, in spite of the leader made some mistakes in the past.

    This conspiracy is against not only the SLMC or Mr Rauf Hakeem but also over all Muslims community dwelling in Sri Lanka.

    This racism government is attempting to ignore the Muslims and cheat by collecting Muslims' votes for government during the election periods.

    These kind of Some "Muanfique" in the SLMCS must be identified and must be punished by people who are in their polling divisions.

    SLMC leadership should follow an strict agreement with candidates prior to issue the tickets during the election period to avoid these kind of destruction by government in future.

    ReplyDelete

Powered by Blogger.