Header Ads



சுவிற்சர்லாந்தில் பள்ளிவாசலில் ஒருவர் சுட்டுக்கொலை

சுவிசின் மசூதி ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிசின் சையிண்டு கேலன் (Saint gallen) நகரில் உள்ள மசூதியில் 23-08-2014 மதியம் 2 மணியளவில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார், அங்கு துப்பாக்கியுடன் திரிந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பட்டப்பகலில் அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

No comments

Powered by Blogger.