வாழைச்சேனையில் கைகுண்டு கண்டெடுப்பு
(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை பஷீர் வீதியில் 305ம் இலக்க வீட்டினில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று (26.08.2014) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிச்சேனை பஷீர் வீதியில் உள்ள ஏ.எல்.எம்.பாறூக் என்பவரின் வீட்டின் பின்பகுதியில் உள்ள குப்பை மேட்டில் கைக்குண்டு ஒன்றைக் கண்ட வீட்டுக்காரர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து வாழைச்சேனை பொலிஸார் கைக்குண்டினை மீட்டுள்ளனர்.
இதனை செயல் இழக்கச் செய்வதற்காக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இக் கைக்குண்டு தொடர்பாக விசாரனைகளை நடாத்தி வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment