Header Ads



ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஜோர்டான்

ஜோர்டான் நாட்டின் மாஃப்ராக் நகரில், சிரியாவுடனான எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை பறந்த ஆளில்லா விமானத்தை ஜோர்டான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதுகுறித்து ஜோர்டான் பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:

மாஃப்ராக் நகரின் வடகிழக்குப் பகுதியில், சிரியா நாட்டைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் அகதிகள் தங்கியுள்ள ஸாதரி முகாமையொட்டி அந்த விமானம் பறந்தது.

அதையடுத்து, ஏவுகணை மூலம் அந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அந்த விமானம் அத்துமீறி ஜோர்டான் வான் பகுதிக்குள் பறந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

No comments

Powered by Blogger.