Header Ads



நோன்புப் பெருநாளைக் கொண்டாடசென்றவர் விபத்தில் வபாத்

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் மூதூர் பாலத்தில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பலத்த காயத்துக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவர் கிண்ணியா சூரங்கல்லைச் சேர்ந்த முஹம்மது அஸ்வர் (வயது - 19) எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முகமாக கிண்ணியாவில் இருந்து மூதூருக்குச் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததனால் பாலத்தின் பாதுகாப்புத் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயத்துக்குள்ளானவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.