கட்டிப்பிடித்து ரமழான் வாழ்த்து தெரிவித்த தற்கொலைதாரி
ஆப்கனில், அதிபராக இருப்பவர் ஹமீது கர்சாய். இவரின் ஒன்றுவிட்ட சகோதரர், ஹஷ்மத் கர்சாய், காந்தகார் நகரில் வசித்து வருகிறார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமானோர் அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளைக் கூறினர்.
அவர்களில் தற்கொலைதாரி ஊடுருவி முஸ்லிம் வழக்கப்படி, ஹஷ்மத்தை கட்டித் தழுவி வாழ்த்துகளை கூறி, திடீரென தன் உடலில் கட்டியிருந்த பயங்கர வெடிகுண்டுகளை, வெடிக்கச் செய்தார்.. இதில், இருவரும் பலியாயினர்.
தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என, காந்தகார் மாகாண கவர்னர், தாவா கான் மினாபால் கூறினார்.
Post a Comment