Header Ads



விசேட தேவையுள்ளவர்களுக்கு பெருநாளுக்கான விசேட கொடுப்பனவு வழங்கும் வைபவம்


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை  சமூக மற்றும் பல்கலாசார அமைப்பின் ஏற்பாட்டில் வறிய விசேட தேவையுள்ள மாணவர்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸா மாவணர்கள் 500 பேருக்கு பெருநாளுக்கான விசேட கொடுப்பனவு வழங்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்-அர்சத் மகாவித்தியாலயம் மற்றும் செந்நெல் கிராமத்தில்  இடம்பெற்றது.
ஆசியர் எம்.சியாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை  சமூக மற்றும் பல்கலாசார அமைப்பின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்ததார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.



No comments

Powered by Blogger.