Header Ads



கிளர்ச்சி மேற்கொள்வதற்கு முஸ்லிம் மக்களுக்கும் பங்கு காணப்படுகிறது

தேசிய ஒன்றுமையை கட்டியெழுப்புவதின் பொருட்டு கிளர்ச்சி மேற்கொள்வதற்கு முஸ்லிம் மக்களுக்கும்; பங்கு காணப்படுவதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு இளையோர் சங்கத்தினால் கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்கம், இலங்கை சட்டத்தரணி சங்கம், முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட பொது அமைப்புகளும் இணைந்திருந்தன.

No comments

Powered by Blogger.