இஸ்ரேலின கொடூர தாக்குதல் - இஸ்லாமிக் ஜிஹாத் இயக்க தலைவரும், அவரது 2 குழந்தைகளும் ஷஹீத்
காஸ்ஸாவில் நேற்று இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கத்தின் தலைவரும், அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். ரெசிடன்ஸியல் ஏரியாவில் இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதலில் ஸலாஹ் அபூ ஹஸனும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.இத்தகவலை காஸ்ஸா போலீஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸுக்கு அடுத்து காஸ்ஸாவில் பெரிய இஸ்லாமிய இயக்கம் இஸ்லாமிக் ஜிஹாதாகும். இதனிடையே ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்டங்களை தடுப்பதற்காக ஜெருசலத்தில் ஆயிரக்கணக்கான படை வீரர்களை இஸ்ரேல் குவித்தது.மேற்கு கரையில் காஸ்ஸா படுகொலைக்கு எதிராக நடந்த பேரணியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீன் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.ஜெருசலம் மற்றும் மேற்கு கரையில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான கண்டன நிகழ்ச்சிகள் நடந்தன.
ஜெருசலத்தில் இருந்து போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment