Header Ads



உயிரை பாதுகாக்க பேருவளையிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேற்றம்..!

பேருவளை நகரின் எல்லைப் புறப்பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் வீடுகள் பல தீக்கிரையாக்கப்பட்டும் அடித்து நொறுக்கப்பட்டுமுள்ள நிலையில் உயிரைப் பாதுகாப்பதற்காக அங்கிருந்து வெளியேறிய  2500 க்கும் மேற்பட்ட மக்கள் பேருவளை சீனன்கோட்டை அல்உமேஸரா மத்திய கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அளுத்கம நகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு இனங்களுக்கிடையில் வெடித்த மோதலையடுத்து வன்முறைகள் பேருவளைக்கும் பரவிய நிலையிலேயே இவர்கள் அகதிகளாக மத்திய கல்லூரியில் தஞ்சம் புகுந்துள்ளனர். பேருவளை நகரின் எல்லைப்பகுதிகளில் சிங்கள, முஸ்லிம்கள் கலந்து வாழ்ந் வந்த நிலையில் அளுத்கம நகரில் வெடித்த மோதலையடுத்து இப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் அடித்து நொறுக்கப்பட்டுமுள்ளதுடன் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன. 

No comments

Powered by Blogger.