பொதுபலசேனாவின் காட்டில் பணமழை..!
(றிசானா பசீா்)
பொதுபலசேனாவுக்கு எங்கிருந்தோ பணமழை பொழிகின்றது. எங்கிருந்தோ தைரியம் வழங்கப்படுகின்றது. கண்டிப்பாக பிண்ணணி ஒன்று செயற்படுகின்றது. இவற்றில் சந்தேகமேயில்லை. அமெரிக்கா இலகுவாக உள்நுழையப் போகின்றது என்ற எச்சரிக்கையை உத்தம ஜனாதிபதிக்கும் முப்படைக்கும் விடுக்கின்றேன். ஒரு அமைச்சுக்குள் எப்படி பொதுபலசேனா உள்நுழைய முடியும் ? ஞானசார தேரா் புத்தரை மதிக்கவில்லை. ஞானசார தேரா் ஜனாதிபதி ராஜபக்ஷவை மதிக்கவில்லை. பிரதமா் ஜயரத்னவை மதிக்கவில்லை. சட்டமா அதிபரை மதிக்கவில்லை. பொலிஸ் மா அதிபரை மதிக்கவில்லை. தலைமை நீதிபதியை மதிக்கவில்லை .காவல்துறை பேச்சாளா் அஜித் ரோஹனாவை மதிக்கவில்லை. சட்டத்தரணிகள் சங்கத்தை மதிக்கவில்லை. மதநல்லிணக்க குழுக்களை மதிக்கவில்லை. பௌத்த மதஉயா்பீடத்தை மதிக்கவில்லை…. இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
சட்டப்புத்தகங்கள் இலங்கையைப் பொறுத்தவரை ஏட்டச்சுரைக்காயா ? சட்டத்தரணிகள் சங்கம் ஏன் இன்னும் அறிக்கை விடவில்லை ? இலங்கை விரிவுரையாளா்கள் சங்கம் ஏன் இன்னும் அறிக்கை விடவில்லை ?
ஞானதேரா் ”அரசாங்கத்தை புரட்டிப் போடுவேன்” என்று ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறார். அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் நெத்தியில் விரலினால் குத்துகிறார். பௌத்த மதகுருவை ஓட ஓட விரட்டி அடிக்கிறார். அரச அலுவலகங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் போன்று அமைச்சர்களை துாக்கியடிக்க நினைக்கிறார். சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு நடக்கிறார். அட்டகாசமிழைக்கிறார். அத்துமீறி எல்லையைக் கடக்கிறார். அவசரமாக பொதுப்பல சேனாவுக்கு புடம் போடுங்கள்.
” கதவைத் தட்டாமல் - அநுமதி பெறாமல் உங்கள் தாய் இருக்கும் அறைக்குள்ளும் உள் நுழையக்கூடாது” என்று எமக்கு இஸ்லாம் மார்க்கம் ஆணித்தரமான கட்டளை இடுகின்றது. ஆனால் அனுமதியின்றி – அத்துமீறி ஒரு அரச அலுவலகத்திற்குள் புகுந்திருக்கிறார். வரலாற்றில் இது ஒரு இழுக்கு. அமைச்சா் றிசாட் இருந்திருந்தால் அவரின் சட்டைக் கோலரை பிடித்து இழுத்திருப்பார். நாளை நமது வீடுகளுக்குள்ளும் கடைகளுக்குள்ளும் பொதுபல சேனா புகுவார்கள். எனவே உங்கள் கடைகளிலுள்ள பொருட்களின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டு வங்கிகளில் பணமாய் வைத்திருங்கள். முஸ்லிம்களின் தலையில் பெருத்த பொருளாதார அடி விழப்போகின்றது போல் தெரிகின்றது. எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது மிக நன்று. வெள்ளம் வருமுன் அணைபோட்டுக் கொள்ளுங்கள். தமிழ் சமூகம் நொண்டியாக்கப்பட்டுவிட்டது. அவ்வாறே முஸ்லிம் சமூகமும் முடமாகப்போகின்றது. ஆகையால் அமைச்சா் அதாவுள்ளாவைப் போன்று ஏனைய அமைச்சர்களையும் அடக்கி வாசிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் சேலையில் முள் விழவும் கூடாது. முள்ளில் சேலை விழவும் கூடாது. சேதம் சேலைக்குத்தான்.
பொதுப்பல சேனாவின் கையிலுள்ள அதிகாரத்தைப் பறிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் மாஅதிபா் ,சட்டமா அதிபரை மிகவும் கண்ணியத்தடன வேண்டுகிறேன்.
Sister Rizana Basheer,
ReplyDeleteWe like your nice tone - Isarudeen
sister Rizana very good advice
ReplyDelete