Header Ads



சாய்ந்தமருது பிரதான வீதியில் விபத்து


(ஹாசிப் யாஸீன்)

சாய்ந்தமருது பிரதான வீதியில் சிறிய ரக (படி) லொறி ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரிலிருந்து விற்பனைக்காக மீன்களை சாய்ந்தமருதுக்கு ஏற்றி வந்த படி லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை மின்சார சபைக்குத் சொந்தமான மின்கம்பம் சேதமாக்கப்பட்டு மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதனால் விபத்து இடம்பெற்ற பிரதேசம் இருளில் மூழக்கிக் காணப்பட்டது.

விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தில் சாரதியுடன் ஒருவர் பிரயாணித்திருந்ததுடன் உயிர்ச் சேதமின்றி சிறு காயங்களுடன் இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இவ்விபத்தினால் படி லொறியினுளிருந்து மீன்கள் பிரதான வீதியில் சிதறிக்காணப்பட்டது.
இவ்விபத்து சாரதிக்கு ஏற்பட்ட சடுதியான தூக்கத்தினால் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.