Header Ads



பொதுபல சேனா சிக்குமா..?


பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி, வெளிநாட்டு நிதியுதவியில் நாட்டில் செயற்படும் சில அமைப்புகள் அந்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, ஆலோசகர்கள் சிலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்நிய மதத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் பௌத்த மதம் அடிப்படைவாத மதம் என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் சர்வதேச சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஊடாக இலங்கையை அவமதிப்புக்கு உட்படுத்துவதே இந்த சதித்திட்டத்தின் நோக்கம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி குரல் கொடுத்துவரும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணம் கிடைக்கும் விதம், நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்படும் விதம், இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ள வெளிநாட்டு அமைப்புகள், ஆலோசனை வழங்கும் தரப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆலோசகர்கள் அரசாங்கத்திடம் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

பொதுபல சேனா உட்பட புதிததாக முளைத்துள்ள பௌத்த அமைப்புகளுக்கு சில வெளிநாடுகள் உதவியளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பொதுபல சேனா அமைப்பு அமெரிக்கா மற்றும் நோர்வே நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.