Header Ads



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம்

(யு.எல்.எம். றியாஸ்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2012/2013ம் ஆண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் பாடசாலை அப்துல் மஜீத்  ஆராதனை மண்டபத்தில்  இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எச்.எம். பாரூக் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் தென்கிழக்கு பல்கலை கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில்
பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மருத்துவம்,பொறியியல்,வர்த்தகம் உட்பட ஏனைய துறைகளுக்கு தெரிவான 40 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் வைபவத்தின் போது அறுவடை சஞ்சிகை மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை ஒளிபரப்பாளர் சாமசிறி மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.






No comments

Powered by Blogger.