Header Ads



பைத்தியகாரன் பத்தும் சொல்வான்...!

(றிசானா பசீர்)

படித்த மக்களுடன் பேசும் போது அறிவாளி போன்று பேச வேண்டும். பாமர மக்களுடன் பேசும் போது பாமர மகனின் பாணியில் பேச வேண்டும். மொத்தத்தில் எல்லோருக்கும் விளங்கும் விதத்தில் பேச வேண்டும். ஞானசார தேரருடன் எந்த விதத்தில் பேசுவது ? எப்படிப் பேசுவது ? படித்த விதத்திலா ? பண்பாடற்ற விதத்திலா ? காடைத் தனத்தோடா ? 

அநுபவ வாயிலாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நமக்கு வயதாகி விடும். ஆகையால் வரலாறுகளிலிருந்து சிலவற்றை கற்கவேண்டும். அநுபவசாலிகளிடம் இருந்து சிலவற்றைப் பெற வேண்டும். சொல்பவனைக் நாம் கவனிக்க வேண்டியதில்லை. சொல்லும் சொல்லையே கவனிக்க வேண்டும்.

ஒருவருடன் விவாதிக்க செல்லும் போது பல்வேறு விடயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1.விவாதத்தின் கருப்பொருள் என்ன ?
2.விவாதிக்க பொருத்தமான ஒருவரா ?
3.அவரது நாகரீகம் அல்லது ஒழுக்கம். 
4.திருமணம் செய்தவரா ? பக்குவம் உள்ளவரா ?
5.வயது என்ன ? 
6.கால அவகாசம் எதுவரை ?

  நடிகை சிறிதேவி வடிவேலுடன் ஜோடி சேர விரும்புவாளா ? இல்லை. இது இமேஜை பாதிக்கும் என்பதால்தான். சிறிதேவி மகளை டைரக்டர்கள் வலைவீசிய போது- ”கதையைக் கூறுங்கள் பின்னா் அனுப்புகின்றேன் மகளை” என்றாள் சிறிதேவி. கருப்பொருள் கௌரவத்தை பாதிக்கக்கூடாது. நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதே இதன் அா்த்தம். கண்ட நிண்ட கேள்விகளுக்கும் – விஷா் நாய்களுக்கும் தெருநாய்களுக்கும் முஸ்லிம் அமைச்சா்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம்தான் என்ன ?

யாரும் யாரையும் காதலிக்கலாம். ஆனால் திருமணத்துக்கு நிறையப் பேரின் கருத்தும் பொருத்தும் வேண்டும். யாரும் யாருக்கும் ஏசலாம். ஆனால் விவாதிக்க முடியாது. நீங்கள் தேரருடன் விவாதிப்பதை நாங்கள் விரும்ப வேண்டும். இதில் எமக்கு உடன்பாடில்லை. இந்த தேரை வம்பைக்கொழுத்திப் போடப்போகிறான். எனவே நீங்கள் யாரும் விவாதிக்க வேண்டாம்.

உலகின் சரித்திர வீரா் மாபெரும் ஆங்கில வல்லமைமிக்க எழுத்தாளன் பேனாட்சாவின் ஒரு ஆங்கில அறிவுரை எனக்கு நினைவுக்கு வருகிறது. 

I learned long ago, never
To wrestle with a pig. You
Get dirty, and besides, the
Pig likes it.                                    
                               George Bernard Shaw
தமிழாக்கம்

நான் நீண்ட காலத்திற்கு
முன்பு கற்ற ஒரு விடயம்.
ஒருபோதும் பன்றி உடன்
மல்லுக்கட்டக்கூடாது.
நீங்கள் அழுக்காகி விடுவீர்கள்.
தவிர, அழுக்கடைவது பன்றிக்கு
ரொம்பப் பிடித்த விஷயம்.
பேனாட்  ஷா -

 மேலும் முஹம்மத் நபி பற்றி….. பேனாட்ஷாவிடமிருந்து ……….

முஹம்மத் நபியின் நற்பண்புகள்
எனக்குப் பிடித்திருக்கின்றன !
மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய
கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்.
இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள்
பிரிட்டன் இஸ்லாம் மதத்தை
ஏற்றுக்கொண்டுவிடும்
என்று எதிர்பார்க்கிறேன்.
****பேனாட்ஷா****

“நிச்சயமாக நீர் மிக உயா்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீா். ((அல்குர்ஆன் 68:04 )

முஹம்மது நபியை மிஞ்சிய ஒரு துாதரும் இல்லை. உத்தமனும் உலகில் இல்லை என்பதுதான் முஸ்லிம்களின் கோட்பாடு. அன்புக்கு தாயைக்கூட அடுத்துத்தான் நேசிக்கின்றோம். பொதுபல சேனா ஞானசார தேரா் ஒரு விஷா் நாய். ஒரு இனத்தீயை மூட்ட அலையும் ஒரு தெருநாய்.. பேரறினரான பேனாட்சாவுக்கும் முட்டாளான ஞானசார தேரருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. புத்தபெருமானின் வழியில் ஞானசார தேரா் செல்லவில்லை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புத்த பெருமான் இதைக்கேள்வியுற்றால் ஞானதேரருக்கு ஞானம வரும வரை கன்னத்தில் அறைவார். ஜெனிவாவில் உங்களைக் காப்பாற்ற கைகொடுத்ததெல்லாம் முஸ்லிம்கள்தான். நன்றி கெட்ட மனிதனை விட நாய்கள் மேலடா !. 

ரவுப் ஹக்கீம்- றிசாட் பதியுதீன்- வாசுதேவ நாணயக்கார – டிலான் பெரேரா  போன்றோர் அமைச்சா் என்ற கௌரவத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ஒலிம்பிக் கிறௌண்டில் ஓடுகின்ற ஒருவன் ஒல்லிக்குள கிறௌண்டில் மோதுவது அந்த ஒலிம்பிக் வீரனுக்கு அழுக்கு.

ஞானசார தேரா் போன்ற தடைக்கற்களை ஒரு படிக்கல்லாக நினைத்து முஸ்லிம்களுக்கு அரசியல் அபிவிருத்திகளை முன்னெடுங்கள். காடுமேடெல்லாம் முஸ்லிம்களைக் குடியேற்றுங்கள்.

இதுவரையும் ஆயுதம் ஏந்திய குழுக்களே பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. உலகில் ஆயுதம் ஏந்தாத ஒரு பயங்கரவாத அமைப்பாக பொதுபலசேனா TRAC என்ற பயங்கரவாதிகளை பட்டியலிடும் அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஞானரிடம் உள்ள நாக்கே காரணம். இது துப்பாக்கியை விட மோஷமானது. இது மனித உள்ளங்களை காயப்படுத்துகின்றது. முகம்மது நபி கூறுகிறார்கள் “ எவா் தனது இரு தாடைகளுக்கிடையில் உள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு இடையில் உள்ளதையும் பாதுகாத்துக் கொள்கின்றாரோ-அவருக்கு சுவா்க்கத்துக்குப் பொறுப்பாக நான் இருப்பேன் என்று ”. பாருங்களேன் ! நாக்கின் வலிமையை !! விவாதம் நடத்துமளவுக்கு பொதுபலசேனா மேதாவியோ அறிவாளியோ கிடையாது. ஒரு பச்சைப்பயங்கரவாத இயக்கம். அண்மையில் சுடப்பட்ட கோபியுடன் தொலைபேசி தொடா்பு வைத்த அனைவரும் இலங்கை அரசால் பயங்கரவாதிகளாக இனங்காணப்பட்டனா். நீங்கள் பொதுபலசேனாவுடன் விவாதித்தால் நீங்களும் TRAC  இனால் பயங்கரவாதிகளாக பட்டியல் படுத்தப்பட்டுவிடுவீா்கள். கவனம் ! எச்சரிக்கை !! Take Care !!!

பூவுடன் சேர்ந்த நாரும் மணம்பெறும் என்பா். ஞானசார பன்.... டன் சோ்ந்தால் அது நாற்றத்தையே வீசும்.

எது எவ்வாறெனினும் – பைத்தியகாரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு. பள்ளிவாசல்களை தகர்த்தால் படைத்தவன் இருக்கான்- பார்த்தக்கொள்வான். பயணத்தைத் தொடா்ந்து விடு !!!

3 comments:

  1. இது சிங்கள் பத்திரிகை அனைத்திலும் பிரசுரிக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  2. எப்போது நம் சமுதாயம் சினிமா மோகத்தில் இருந்து விடுபடும் ?? உதாரணத்தில் கூட கேடு கெட்ட சினிமா கேவலம்..

    ReplyDelete
  3. This is to all Muslims mp and minister's of parliament, dont go to argue with ganasara pig , if you go to argue you and all muslims will get dirt, better to avoid that.

    ReplyDelete

Powered by Blogger.