Header Ads



மலேசிய விமானத்தை தேடுவதில் எவ்வித பலனும் கிட்டவில்லை - அவுஸ்திரேலியா


காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் சென்று தேடும் பணிகள் கடந்த 7 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் எவ்வித பலனும் கிட்டவில்லையென்பதால் எதிர்வரும் 5 முதல் 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

239 பயணிகளுடன் மார்ச் மாதம் 8 ஆம் திகதி காணாமல் போன எம் எச் 370 விமானம் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் வெளியாகவில்லை.

No comments

Powered by Blogger.