Header Ads



புத்தரை உடலில் பச்சை குத்தவேண்டாம் - இலங்கை செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

புத்தரின் படத்தை உடலில் பச்சை குத்திக் கொண்டு சிறிலங்கா செல்ல வேண்டாம் என்று தனது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் நேற்று இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கையில் புத்தரின் படத்தை பச்சை குத்திய நிலையில், சிறிலங்கா சென்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணியான நயொமி மிச்சேல் கோல்மன் என்ற பெண், கட்டுநாயக்கவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை அறிவிப்பை பிரித்தானியா வெளியிட்டுள்ளது. 

புத்தரின் படத்துடன் செல்லும் பிரித்தானியப் பயணிகள், சிறிலங்காவில் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்றும், புத்தர் சிலைகளுக்கு முன்பாக நின்று படம்பிடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், பிரித்தானியாவின் புதிய பயண எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் உள்ள அசாதாரண நிலையைக் காரணம் காட்டி பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் ஏற்கனவே பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.  இந்தநிலையிலேயே, தற்போது புதிய பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.