Header Ads



பொதுபல சேனாவின் கோரிக்கை - தவ்ஹீத் ஜமாத் தடைசெய்யப்படுமா..? (வீடியோ இணைப்பு)

அரசாங்கத்தை மாற்றுவதற்கு சாத்தியம் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பினர் வெளியிட்ட கருத்தின் படி ஏதேனும் ஒன்றை செய்யுமாறு மல்வத்தை மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை இன்று சந்தித்தனர்.

தேவையேற்படின், அரசாங்கத்தை மாற்றுவதற்கு தமது அமைப்பிற்கு பலம் இருப்பதாக பொதுபல சேனா நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தது.

இதன்படி, இன்று மல்வத்தை மகாநாயக்கருடன், பொது பல சேனா அமைப்பின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துரையாடினார்கள்.

இதேவேளை, அண்மையில் சட்டத்துறை நுழைவுப் பரீட்சையில் மாணவர்கள் உள்ளவாங்கல் தொடர்பான பிரச்சினை குறித்தும் ராவணா பலய அமைப்பினர் இன்று மல்வத்தை மகாநாயக்கரை சந்தித்து பேசியுள்ளார்கள்.

1 comment:

  1. அப்ப நமது ஜனதியை கையாலாகாதவன் என்பது கலபொட ஞானசாரவின் கருத்து இதை ஜனாதிபதி புரிந்து கொள்வாரா?

    ReplyDelete

Powered by Blogger.