கல்முனை மக்கள் வங்கியின் உதவி முகாமையாளர், உம்ரா சென்றபோது மக்காவில் வபாத்
புனித உம்ரா கடமையை நிறைவேற்ற மக்கா சென்றிருந்த கல்முனை மக்கள் வங்கியின் உதவி முகாமையாளரான எம். என். சித்தி பாயிஷா ஹரீஸ் (வயது - 44) நேற்று மக்காவில் காலமானார்.
மருதமுனையைச் சேர்ந்த இவர் ஓய்வுபெற்ற அதிபர் நZமின் மகளும், திருகோணமலை விவசாய பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். ஹரீஸின் மனைவியும், சுடர்ஒளி பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. எச். எம். பூமுதீனின் மாமியாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா புனித மக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete