Header Ads



பிக்குவின் தாக்குதலில், தலைமை பிக்கு மரணம்

பிக்கு ஒருவரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்பிட்டிய பகுதியிலுள்ள விஹாரையொன்றின் விகாராதிபதி தேரர் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி தாக்கப்பட்ட குறித்த தேரர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. பிக்குகள் கொலைகாரர்களாகவும் பித்தலாட்டக்காரர்களாகவும் தலைதூக்கி நாட்டையும் நாட்டு மக்களையும் சிக்கலுக்குள்ளாக்கி வருகின்றார்கள். ஆனால் தலைமைப்பீட பிக்குகளோ அதையெல்லாம் வாய்மூடி பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதுதான் பெளத்தம் என்றெண்ணும்போது பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது.

    பெளத்த செயற்பாடுகளையும் அதைப்பின்பற்றும் நல்லவர்களையும் குற்றம் சொல்லவில்லை, ஆனால் சிலரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளால் நாடே நாசமாகிக்கொண்டிருக்கின்றது. இதை அவர்கள் கண்டிக்கலாம் என்பது எமது கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.