Header Ads



புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளனர் - பிரதமர் டி.எம். ஜயரத்ன

புத்தசாசனத்தை அழிக்க தயாராகியுள்ள, அதற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன அமைச்சரான பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலைமையானது பௌத்த மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.

அப்படியான நபர்களை புத்தசாசனத்தில் இருந்து நீக்கும் வகையில் குறித்த சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சட்டத்திற்கு 31 தலைமை பௌத்த பிக்குகளில் உதவியும் கிடைத்துள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எப்ப வரும் எங்க வரும், இப்படி சொல்லிச்சொல்லியே எல்லோரும் வீட்டுக்கு போயிடுவீங்க, ந்டக்கிறது என்னவோ நடந்திக்கிட்டுதானே இருக்கு. அரசாங்கத்துக்குள்ள இருக்கும் பொதுபலசேனாவை முதலில் இல்லாமல் ஒழித்துவிடப்பாருங்கள் மற்றதை பிறகு பார்கலாம், சட்டங்களை உருவாக்கி அவைகளை அப்படியே புத்தகங்களாக்கி இருப்பில் வைத்துக்கொண்டு செய்வதையே செய்கின்றார்கள், எமக்கு சட்டத்தில் இந்த ஆட்சியில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதென்று சிங்கள மக்களே சொல்லும்போது சிறுபான்மையினர் என்ன சொல்வார்கள்.
    பேசிப்பேசி இருக்காமல் எதையாவது செய்ங்கய்யா...

    ReplyDelete

Powered by Blogger.