Header Ads



எனது உயிர்போனாலும் தம்புள்ள பள்ளிவாசலை அகற்ற விடமாட்டேன் - அமைச்சர் ஜனக்க

தம்புள்ள முஸ்லிம் பிரமுகர்களை நேற்று சனிக்கிழமை தனது இல்லத்தில் சந்தித்துள்ள அமைச்சர் க்க பண்டார தென்னக்கோன் என்ற உயிர்போனாலும் தம்புள்ள பள்ளிவாசலை அகற்ற விடமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனது சக்தியையும் மீறி பள்ளிவாசலுக்கு பங்கம் ஏற்படுத்துமிடத்து: அன்றுமுதல் எனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனவும் இதன்போது ஜனக்க பண்டார தென்னக்கோன் உறுதியளித்துள்ளார். இதன்போது அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வாவும் உடன் இருந்துள்ளார்.

இதனை தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபையின் உபசெயலாளர் ரவுப் ஜப்னா முஸ்லிம்  இணையத்திற்கு ஸ்கைப் மூலமாக தெரிவித்தார்.

அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோண் நேற்று தனது இல்லத்திற்கு முஸ்லிம் பிரமுகர்களுக்கு மாத்திரம் விருந்துபசாரம் வழங்கினார். இந்த மாகாண சபை தேர்தலில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோணின் மகனும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. HE IS A GENUINE POLITICIAN.

    ReplyDelete
  2. inthe qafir better muslim logovudan ulla arasiyal+vaathikalaivida.

    ReplyDelete
  3. Allah akbar.allah oru samayathil anniyarai/kafirarai kondu islathai pathukappenentru sonnathu inthamathiri santherpankalthana enru ninaika thonruthu.masha allah. Allah awaruku hidayathai koduppanaha. Muslim amaicharhala intha amaicharai parthathawathu thirunthungal.inshah allah pitkalathil ungalathu nilamai eppadi irukumengru parpom.kewalapattu poveerhal adhatku mun islathukkaha ethawathu seyyungal.

    ReplyDelete
  4. இப்போது நினைக்கத்தோன்றுகிறது.... எமது முஸ்லிம் பிரதிநிதிகள சோறுதான் தின்கிறார்களா ? அல்லது................... ஒரு அரசியல் இலாபத்துக்காவாவது இப்படி ஒரு அறிக்கை விட்டால் கூட எங்களுக்கு ஒரு மன ஆறுதல் தருமே..... !!! தமது மதவழிபாட்டுக்கு அச்சுருத்தல் வரும் போது வாய்பொத்தி ஜால்ரா அடிக்கும் உங்களால் வேறு எதைத்தான் பெரிதாக சாதிக்கப்போகிறீர்கள்.

    இருதியாக சொல்ல வேண்டியது.... எமது மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்று எமது சமுகத்துக்கே குழி பறிக்கும் எமது தலைவர்களை அல்லாஹ் தான் நல்வழிப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  5. மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்களின் இத்தனை உறுதியான வார்த்தைகளை நிச்சயம் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.

    ஆனால் அவரது மகனை முஸ்லிம்களுடைய வாக்குப் பலத்தினால் அரசியலில் வாரிசாக்கி விட்டு அவர் பள்ளிவாசலுக்கு பாதகம் நிகழும்போது அவருடைய அரசியலுக்கு முழுக்குப் போடுவதால் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.

    தந்தையைப் போல்தான் மகனும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பார் என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும்?

    எனவே அவரது மகனும் முஸ்லிம்களுக்கு தமபுள்ள பள்ளிவாசல் விடயத்தில் அவரது உறுதியான கருத்தை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

    இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளன. அதற்கிடையில் அமைச்சரின் மகனும் தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் அவரது கருத்தையும் , உறுதிப்பாட்டையும் தெரிவிக்க முன்வர வேண்டும்.

    அப்படி வேட்பாளரும் தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் தந்தையைப் போல் தெளிவாகவும், உறுதியாகவும் அவரது கருத்தை முன்வைத்தால் மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் தமது வாக்களிப்பு தொடர்பான முடிவுகளை இறுதி நிலையில் மீள் பரிசீலனை செய்யலாம்.

    முஸ்லிம்களுக்கான நமக்கு நமது இறையில்லங்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. இவருடைய மகனும் தேர்தலில் போட்டி இடுவதால்தான் இப்படி பேசி இருப்பாரோ எனவும் மனசு சொல்லுகிறது, இருந்தாலும் முஸ்லிம்களில் ஒருத்தனாவது இப்படி ஒரு பேச்சை இதுவரைக்கும் வழங்கவில்லை என்பதால் இவர் அவரகள் கத்னா செய்தவர்களை விட எவ்வளவோ சிறந்தவர்.

    ReplyDelete

Powered by Blogger.