Header Ads



பாதைகளை கடக்கும் போது, தொலைபேசியில் உரையாடினால் அபராதம்

பாதைகளை கடக்கும் போது, தொலைபேசியில் உரையாடிக்கொண்டு செல்லும் பாதசாரிகளுக்கு அபராதம் அறவிடப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இதற்கான சட்டம் இந்த வாரம் முதல் இறுக்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதையை கடக்கும் போது ஏற்படுகின்ற விபத்துக்களுக்கு, தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பாதையில் கவனம் இன்றி பயணிப்பதும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறு தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பாதையை கடக்க முற்படுபவர்களுக்கு, முதலில் எச்சரிக்கப்படுவதுடன், பின்னர் அபராதம் அறவிடப்படவிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். sfm

No comments

Powered by Blogger.