Header Ads



முத்திரை வரியினை துரிதமாக பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்த மாகாண மட்ட குழுக்கூட்டம்


(அகமட் எஸ். முகைடீன்)

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களிற்கான முத்திரை வரியினை துரிதமாக பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்த மாகாண மட்ட குழுக்கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று (28.08.2013) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட்டின் பணிப்ரைக்கு அமைவாக ஆசிய மன்றத்தின் உள்ளூர் பொருலாதார ஆட்சி செயற்திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்குறித்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எம்.உதயகுமார், மாகாண பிரதிப்பிரதம செயலாளர் – நிதி எஸ்.குமரகுரு, மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்றத்தின் சார்பில் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மற்றும் மட்டக்களப்பு காணிப் பதிவாளர்கள்,  கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளின் கணக்காளர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முத்திரைவரிகளை உள்ளூராட்ச்சி மன்னறங்கள் இலகுவாக பெறும் பொருட்டு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் நோக்கம் குறித்தும் ஆசிய மன்றத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தினால் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு முத்திரை வரியினை வழங்குவது தொடர்பான கடந்த கால செயற்பாட்டு மீளாய்வு, தற்போதைய வரி அறவீட்டு நிலைமை, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முத்திரை வரியினை வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்ச்சி மன்றங்களுக்கு இவ்வருடம் டிசபம்பர் மாதத்திற்கு முன்னதாக 2011ம் ஆண்டுவரை நிலுவையாக உள்ள முத்திரை வரிகளை வழங்க முடியும் என இறைவரி திணைக்கள அதிகாரிகாளினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

காணிப் பதிவுகளை மேற் கொள்கின்றபோது உண்மைப் பெறுமானத்தை காண்பிக்காது குறைந்த பெறுமானமுடையதாக காண்பிக்கப்பட்டு பதிவுகள் மேற் கொள்ளப்படுவதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வர வேண்டிய அதிகளவான வருமானங்கள் இழக்கப்படுவதாக இங்கு கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் சுட்டிக்காட்டினார். இதனை நிவர்த்திக்க தேவையான வழிவகைகளை மேற் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார். அத்தோடு மாநகர சபையின் சீரான செயற்பாட்டிற்கு முத்திரை வரி வருமானம் பாரிய பங்களிப்பினை செய்வதனால் அவற்றை விரைவாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.