Header Ads



கிண்ணியாவில் முதலமைச்சரின் பக்கத்து வீட்டில் திருட்டு

(முனைச்சேனை பர்வீன்)

பெரிய கிண்ணியாவில்  முதலமைச்சரின் பக்கத்து வீட்டில்  68 ஆயிரம் பெறுமதியான எல்.சி.டி மொனிட்டர் ஒன்றினை 2013.06.02 ஆம் திகதி இரவு 11..30 மணியளவில் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனை அதிகாலை தொழுகைக்காக எழுந்த போது தெரியவந்ததாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.

திருடர்கள்  திருடுவதற்கு வீட்டின் பின் பக்க  ஜன்னல் வழியினைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளாத வீட்டின் உரிமையாளரான வைத்தியர் தெரிவித்தார்.

இந்த மொனிட்டரினை தொலைக்காட்சிப் பெட்டியாகவும் பயன்படுத்த முடியும்.  இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார் 

No comments

Powered by Blogger.