மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாத துண்டுப்பிரசுரம்
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இன்று 22-05-2013 புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதேவேளை, பெரியபுல்லுமலையில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டு அமைச்சர்கள் வெளியேறிக் கொண்டிருக்கையில் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமை தாங்கும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் உயர்மட்ட உறுப்பினரும் செங்கலடி வர்த்தகருமான தியேட்டர் மோகன் 'உறுகாமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?' என்ற இனத்துவேஷ துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்.

Tamil muslim has to be a good friend. if not we will be (Tamil& Muslim)in big rabble.
ReplyDelete