Header Ads



ஆஸாத் சாலியின் கைதுக்கு எதிர்ப்பு - அம்பாறையில் ஹர்த்தால் (படங்கள்)

(அனாசமி + அமீர் + முஹமமது பர்ஹான் + ஜெஸ்மின் மொஹமட் + (எஸ்.அன்சப் இலாஹி + கே.சி.எம்.அஸ்ஹர்)

இன்று (2013.05.09) கிழக்கில் பரிபூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.  ஆஸாத்சாலி அவர்களைக் கைது செய்தமை தொடர்பாக முஸ்லீம் அமைப்புக்களினால் இன்று ஹர்த்தால் அனுஷ்டித்து, அன்னாரின் கைது சட்டவிரோதமானவை என்பதையும், பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும், அவரை அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் முகமாகவே இன்றைய ஹர்த்தால் கடையடைப்பு நடைபெறுகின்றது. 

கிழக்கிலுள்ள பல இடங்களில் இக் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றன. குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற முஸ்லீம் பிரதேசமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராத காரணத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும், வங்கி போன்ற அரச நிறுவனங்களும் மக்களின் நடமாட்டம் குறைவான காரணத்தினால் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வீதியில் ஓரிரு வாகனங்களைத் தவிர ஏனைய வாகனப்போக்குவரத்தும் குறைந்துகாணப்படுகின்;;றன. அத்துடன் அனைத்திடங்களிலும் இராணுவத்தினர் நடமாடுவதையும் காணக்கூடியதாகவும் உள்ளது.







5 comments:

  1. Mashallah.. Good job & This is the Unity We need in Muslim.

    ReplyDelete
  2. திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு ஏநோ புரியவில்லை.

    ReplyDelete
  3. realy good masah allah cuntinu pls

    ReplyDelete
  4. Where other supporters of this Asaath? Why you people ask expect protest from Ampara or East? You know East only able muslims available to do such protest? other that East, no back born to do such Protest against to Government? Today is an example and April 25th is another example of the same type of protes. Only East responted for April 25th Protest call.
    This is why we say, Asaath Kumbal trying to Eyesbreak of Government against to East Community. They will realize soon.What happend in other district in East? Muslim unity in Amparai but where All Island Muslims unity?

    ReplyDelete

Powered by Blogger.