காத்தான்குடியில் சிறுமியின் இருதய சிகிச்சைக்காக பொது மக்களிடம் நிதி சேகரிப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனனோடை-13 பத்ர் பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் சகோதரர் எம்.அமீன் என்பவரின் மூன்றாவது மகள் பாத்திமா நிஷா எனும் 4வயது சிறுமி கடந்த மூன்று வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றார்.
இச்சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய்; தேவைபடுகின்ற நிலையில் குறித்த சிறுமியின் குடும்ப வறுமையை கருத்தில் கொண்ட காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் அர்களின் ஒன்றிய தொண்டர்கள் மூலம் காத்தான்குடி -5 ஊர் வீதி தொடக்கம் காத்தான்குடி -01 முதலாம் குறிச்சி வரையுள்ள பகுதியில் பொது மக்களிடம் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்து வந்தனர்.
பொது மக்களிடம் சேகரித்த நிதியை (56983.00 ரூபாய்) சிறுமியின் குடும்பத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இரவு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதான காரியாலயத்தில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
yaa allah 2 latsam kodukka unka oorla selvantharhal illayapa
ReplyDelete