Header Ads



பௌத்த தேரர் வேடமிட்டு பண சேகரிப்பில் ஈடுபட்டவர் கைது


(அபூ முஸ்னா)
மெல்சிரிபுர நகரில் பௌத்த தேரர் வேடமிட்டு பண நன்கொடை சேகரிப்பில் ஈடுபட்ட ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த பௌத்த தேரரை பொலிசார் இஹலதாலோஸ்பத்து பிரதான பௌத்த தேரரிடம் ஒப்படைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்களைப் பெற முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடம் சுமார் ஏழ இலட்சம் ரூபாய் வைப்பிடலப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களும் தெரிய வந்துள்ளன. இதன் பின்னர் அவரிடம் எழுத்து மூலமான வாய்மொழியினைப் பெற்றுக் கொண்டு அவரின் விருப்பத்தின் பேரில் அவர் அணிந்திருந்த பௌத்த தேரருக்கான உடை களையப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் போலி நோட்டு சம்பந்தமான வழக்கு ஒன்றின் நிமித்தம் குற்றவாளியாக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்ற விடயமும் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

මැල්සිරිපුර නගරයේදී බෞද්ධ භික්ෂුවක ලෙස චීවරය දරමින් වංචනික අන්දමින් මුදල් සම්මාදම් කිරීමෙහි යෙදී සිටි චීවරධාරියකු ප‍්‍රදේශවාසීන් විසින් අල්ලා පොලීසියට භාර දී ඇතැයි වාර්තා වේ.
පොලීසිය විසින් සැකකරු ඉහළෙදාළොස්පත්තුවේ ප‍්‍රධාන අධිකරණ සංඝනායක උඩකැන්දවල පේමරතන නාහිමියන් වෙත ඉදිරිපත් කිරන ලදුව ප‍්‍රශ්න කිරීමෙන් පසු ඔහුගේ සියලූ තොරතුරු හෙලිවී තිබේ.
සැකකරු සතුව රුපියල් හත්ලක්ෂයක් බැර කොට ඇති බැංකු ගිණුමක් ද තිබී ඇති අතර සැකකරුගෙන් ලිඛිත ප‍්‍රකාශයක් සටහන් කරගැනීමෙන් පසු අධිකරණ සංඝනායක හිමියන් විසින් ඔහුගේ කැමැත්ත මත සිවුරු ඉවත් කොට උපැවැදි කෙට තිබේ.
ව්‍යාජ මුදල් නෝට්ටු පිළිබඳ නඩුවකට වරදකරු වී සිව් අවුරුදු දඬුවමක් විඳ ඇති අයකු බවට චද හෙළි වී ඇති අතර සැකකරු අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් පසු රක්ෂිත බන්ධනාගාරගත කොට ඇත.

2 comments:

  1. இதுபோன்றகாரியங்களெல்லாம் நாட்டில் நடக்கின்றது ஆனால் நாங்கள் முஸ்லிம்களோ ஒன்றும் குத்திக்காட்டவிரும்பவில்லை ஆனால் முஸ்லிம்கள் பற்றியும் அல் குர் ஆன் பற்றியும் ஜமிய்யதுல் உலமா பற்றியும் முஸ்லிம்களின் ஆடைகள் உணவுவழிமுறகள் வணக்கஸ்த்தல்ங்கள் வியாபார நடவடிக்கைகளேன்று எமது எல்லாக்காரியங்களுக்குள்ளுமே பொதுபலசேன ஜாதிக ஹெல உறுமய மற்றும் சம்பிக்க ரனவக்க போன்ற குளுக்களும் அடிக்கடி தலையிடுவது முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டுமென்பதுதான் நாட்டிலுள்ள அனைவரும் வேண்டிக்கொள்வது, ஆகவே இதற்கிணங்க பெளத்தமக்கள் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்துள்ளார்கள் முஸ்லிம்கள் படும் அல்லல்களை அறிந்து பலவிடயங்களின் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு எதிர்புத்தெரிவித்துள்ளார்கள் இதையிட்டு முஸ்லிம்கள் மிகவும் சந்தோஸத்துடன் பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவிப்பதுடன் இன்னும் எதிர்காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டி இறையாசிக்காக பிராத்திக்கின்றோம். அத்துடன் மேற்டுறிப்பிட்ட இன, மதவாதிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக யார் இருக்கின்றார்களோ அவர்களை கண்டறிந்து பதவியிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் நீக்கிவிட நாம் அனைவரும் ஒன்றுதிரளவேண்டும்.

    ReplyDelete
  2. Athu insha Alllah nadakkum Allah periyawan.

    ReplyDelete

Powered by Blogger.