Header Ads



களத்தில் குதிப்பவர்களை ஆதரிக்கத்தெரியாத முஸ்லிம்கள் - மௌலவி முபாரக் விசனம்


மாநகர சபையில் கறுப்புப்பட்டி அணிவதை விட பதவிகளுக்கு வாலாட்டும் தமது தலைவர்களுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிப்பதற்கு இவர்கள் முன் வர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கூறியிருப்பதாவது,

இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே கண்டிராத அளவு இனத்துவேசம் இந்த ஆட்சியில் பகிரங்கமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது பூனைக்கு மணி கட்டுவது யார், எப்படி என்று தெரியாமல் முஸ்லிம் கட்சித்தலைமைகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. தங்களது சுய நல பதவிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்ற அச்சத்திலேயே இவர்கள் இவை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அச்சப்பட்ட நிலையில் மூடிய அறைக்குள் இருந்து கொண்டு குசு குசுக்கின்றனர். 

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்து பற்றி இவர்கள் பேசுவார்கள் என நம்பி இவர்களுக்கு வாக்களித்த முஸ்லிம் சமூகம் இன்று நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கும் அதே வேளை, சமூகத்தக்காக தமது சுயநலன்களை வீசி விட்டு களத்தில் குதித்திருப்போரைக்கூட இனங்கண்டு அவர்களை ஆதரிக்கத்தெரியாத ஒரு சமூகமாகவும் முஸ்லிம் சமூகம் இருக்கிறது. 

அதே போல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் கீழ் மட்ட உறுப்பினர்களும் தலைவர்களும், செயலாளர்களும் வேறு விதமாக நடப்பதைக்காண்கிறோம். முஸ்லிம்களின் பிரச்சினைக்கு ஒரு மாகாண சபை உறுப்பினர் அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டே கண்டன தீர்மானம் கொண்டும் நகைச்சுவையை செய்கிறார்.  மட்டக்களப்பு நகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அரசின் வாலான தமது தலைமைகைகு ஆதரவளித்துக்கொண்டே கறுப்புப்பட்டி அணிகிறார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரோ தமது தலைவர்களின் மௌனம் பாராட்டுக்குரியது என வெட்கமில்லாமல் வாலாட்டுகிறார். கட்சிகளின் செயலாளர் நாயகம்களோ பூசி மெழுகி தலைமைகளுக்கு நோகாமல் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் இந்த அரசாங்கத்தின் வால்களாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். 

தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலுக்கெதிராக நாம் ஒரு அறிக்கை விட்டதற்காக பொலிஸ் மற்றும் இரகசிய பொலிசாரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்தோம். ஆனால் இப்போது இத்தனை பகிரங்கமாக போஸ்டர்கள் ஒட்டப்படும் போதும் பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என்ற அழகிய வார்த்தையை எழுதி அமவதித்த போதும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்த நிலையிலும் இவற்றை பாராளுமன்றத்தில் கண்டித்துப்பேசாமல் இவர்களின் சுயநல ஏமாற்றுத்தலைமைகள் வாலாட்டிக்கொண்டிருக்கின்றன. 

இவ்வாறு தமது சுயநலனுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்து அற்ப எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் தமது தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவித்து கட்டுப்படுத்த முணையாமல் மாநகர உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிவதில் எந்த அர்த்தமுமில்லை என்பதை கூறி வைக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.  

1 comment:

  1. மார்க்கங்களில் சிறந்ததும் உண்மையானதும் இஸ்லாம் மார்க்கம்தான் ஆனால் மற்றமார்க்கங்களிலுள்ளவர்களைவிடவும் மோசமானவர்கள்தான் இஸ்லாமியர்கள் என்றபெயரில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் அதாவது,பொய்,களவு,ஏமாற்று என்றும் ஈமான் பல்வீன்மான் செயல்களில் ஈடுபடுவதும் முஸ்லிம்கள் அதிகமானவர்களாக இருக்கின்றார்கள, நம்பிக்கைக்கு துரோகம் செய்பவர்கள் அதிகமுள்ளனர், இவர்களின் கொள்கைகள் ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் எப்போது சேருகின்றது என்றுபார்ப்போமானால் கண்டிப்பாக பதவிக்காகவும் பணத்துக்காகவும் ஆசைப்பட்டு தன்னை தெரிவு செய்த தன் பகுதிமக்களுக்கே துரோகம் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம்தான் கண்டிப்பாக அதைப்பார்க்கலாம். இவர்கள்தாம் மேற்கூறப்பட்ட அனைத்து பண்புகளுக்கும் உரித்தானவர்கள்......

    ReplyDelete

Powered by Blogger.