Header Ads



அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'விரல்களற்றவனின் பிரார்த்தனை'


சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'விரல்களற்றவனின் பிரார்த்தனை' சிறுகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 03.03.2013 ஞாயிறு பி.ப. 4.30 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மூத்த கவிஞரும் எழுத்தாளருமான அல் அஸூமத் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் திரு. ப.க. மகாதேவா தமிழ்வாழ்த்துப் பாடஇ கொழும்பு டீ.டிஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவன் எம்.ஏ.ஏ.எம். அஹ்ஸன் அலி வரவேற்புரை நிகழ்த்துவார். முன்னாள் அமைச்சரும் இந்நாள் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி பிரதம அதிதியாகவும் வத்தளை மாபோளை நகரசபைத் தலைவர் ஏ.எச்.எம். நௌஷாத் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளும் இவ்விழாவில் சிறப்பதிதியாகக் கலந்து கொள்ளும் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

நூல் பற்றிய கருத்துரைகளை எழுத்தாளர் மு.தயாபரன் மற்றும் ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப் ஆகியோர் நிகழ்த்த வாழ்த்துரையை மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவையின் செயலாளர் எம்.எம்.பீர்முஹம்மத் வழங்குவார்.

நிகழ்ச்சிகளை ஒலி ஒளிபரப்பாளர் ஏ.எம். தாஜ் தொகுத்து வழங்கவுள்ளார்.


1 comment:

  1. நல் வாழ்த்துக்கள் ....

    ReplyDelete

Powered by Blogger.