Header Ads



முஸ்லிம் பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த கைகோர்க்குமாறு அழைப்பு..!


மூதூர் பீஸ் - ஹோம் நிறுவனத்திடமிருந்து.

ஈமானிய இதயங்களின் கவனத்திற்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும்...!

றிஸானா நபீக் கற்றுத்தந்த பாடத்தின் பின்பு...

மூதூர் பீஸ்-ஹோம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மூதூரில் செயற்படும் மஜ்லிஸ் அஸ்-ஸுறா, உலமா சபை, கதீப்மார்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கோரும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம்.  

பெண்கள் வெளிநாடு செல்வதினால் ஏற்படுகின்ற  சமூக சீரழிவுகளை தடுப்பதற்கு       பணிப் பெண்களாக வெளி நாடு செல்வதனை நிறுத்துவதே முதன்மையான வழியென்பதனால்   பத்தாயிரம் பேர்களின் கையெழுத்துடன் அரசாங்கத்திற்கு   மகஜர் ஒன்றை அனுப்பும் முயற்சியில் பொது மக்களின் பேராதரவுடன்  கைகோர்த்துள்ளோம்.
சமூக மாற்றத்தை நோக்கிய இம்முயற்சியில் அனைத்து பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களையும் இணைத்துக் கொள்வதற்கு அவ்வப் பிரதேசங்களிலுள்ள        குறிப்பாக ஈமானிய இதயங்களை முன்னின்று செயற்படுமாறு  அழைக்கின்றோம். 

           ஜஸாக்கல்லாஹு கைரா!
                                 தலைவர் 
                                 பீஸ்- ஹோம்
                                 மூதூர்.

5 comments:

  1. முஸ்லிம் கலாச்சார திணைக்களம் வழங்கும் முஸ்லிம் என்பதற்கான சான்றிதழை தடை செய்தால் சவுதி அரேபியாவிற்கு முஸ்லிம் பெண்கள் செல்வதை தடை செய்யலாம்.

    ஏனைய நாடுகளுக்கு செல்பவர்களை தடுப்பதற்குத்தான் சற்று கடினம்,அதனை தடுப்பதற்கும் ஏதும் வழிகள் தேடவேண்டும்...

    இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம் .....
    எம்மால் முடியும்.

    ReplyDelete
  2. மூதூர் உலமா சபையை பற்றி எனக்கு தெரியாது ......

    சில மொளவ்லவிகளும், உலமாக்களும் தானே ஊர் பணக்காரர்களின் சம்பந்திகள்.
    (காரணம்:அது ஒன்றுமில்லை அவங்களுக்கு ஒரு பொம்புள புள்ளதான்)

    ஆனால் சில ஊர் பள்ளிவாயல் சம்மேளனமும், உலமாக்களும் ஜும்மாவிற்கு பின் யாருக்கும், எந்த கட்சிக்கும் வக்குபோட வேண்டும் என்ற தீர்மானத்தை பகிரங்கமாக மக்களுக்கு (தெளிவாக)அறிவிப்பார்கள் ?

    இவர்களுக்கு அதை விட முக்கியமா இந்த பணிப்பெண்கள் விடயம் ?

    இன்ஷா அல்லாஹ்,
    தூய எண்ணத்தோடு முன்னெடுங்கள்,இறைவனின் உதவி மிக அருகில் .

    ReplyDelete
  3. அனைத்து பள்ளிகள் சம்மேளத்தினால்,

    01.சீதனம் வாங்குபவருக்கு இஸ்லாமிய விவாக பதிவு செய்யாதீர்கள்.
    02.சக்காத்தினை கூட்டக சேர்த்து முறையாக பகிர்ந்தளியுங்கள்
    * சிறந்த வாழ்வாதாரத்தை நாட்டில் உருவாக்கினால் அவர்கள் ஏன் வெளிநாடு நாடப்போகிரார்கள் ..!

    ReplyDelete
  4. Mihavum vareveatkaththakka aaroakkiyamana muyatchi valla Allah immuyatchiyai veatriyadaiyachcheiya veandum.

    ReplyDelete
  5. அக்கரையுர் முல்லா சொல்வதை செய்வதோடு சீதனத்துக்கு எதிராக கையொப்பம் வாங்கலாமே!சீதனத்துக்கு எதிராக மிம்பரைப்பாவிக்கலாமே!சீதனத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தலாமே!சீதனத்துக்கு எதிராக இளைஞர்களை ஒன்று திரட்டலாமே!
    குறிப்பு- கனிசமான உலமாக்கள் சீதனத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் காரணம் பாதிப்பு அவர்களுக்கல்லவா?

    ReplyDelete

Powered by Blogger.