Header Ads



றிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியுதவி (படம்)



(எம்.ஜே.எம். தாஜுதீன் + மூதூர் முறாசில்)

சவுதி அரேபியாவில் தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் பெற்றோர்களான முகம்மது நபீக் மற்றும் செய்யது பரீனா ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் சங்கத்தால் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதி ரிசானாவின் பெற்றோர்களுக்கு கையளித்தார்.

அமைச்சர் டிலான் பெரேரா- கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீத்- திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். தௌபீக்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

8 comments:

  1. ஒரு பதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்தாச்சு.. பொதுபலசேனாவால் பதிக்கப்படும் அனைத்து மக்களுக்கும் எப்போது உதவப்போகிறீர்கள். ஐயா..! வருமுன் காப்பது சிறந்தது.

    ReplyDelete
  2. weldone sir , this is great gift for them , May Allah give them relief for thier problems . ammeen

    ReplyDelete
  3. அப்ப ஹிஸ்புல்லவிடம் (சஊதி நபர்) கொடுத்த பணம் புளிக்குமா? அதற்கு என்ன நடந்தது? அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் போது தட்டிக்கழிக்க வேண்டாம். (நபீக் அவர்களே நீங்கள் பணத்தை மஹிந்தவிடமிருந்து வாங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்)

    ReplyDelete
  4. அல் ஹாஸ் சவுதிகாரண்ட உதவி அல்லாஹ்ட உதவி என்டு வஹியா வந்தது உங்களுக்கு??? செய்வதையும் செய்துவிட்டு பணத்தால் மூடிமறைக்க முட்படுவோறுக்கு துணைபுறிய வேண்டும் என ஏதும் சபதம் எடுத்து விட்டீர்களா இல்லை அவர்கள் அப்படி வலியுறுத்த உங்களை வாங்கி இருக்கிறார்களா??? நம் நாட்டவர்கள் உதவுவது மனிதாபிமானம் ஆனால் ஏன் சவுதியர்கள் இந்த குடும்பதிட்கு உதவ வேண்டும் அவர்கள் பார்வையில் இந்த குடும்பம் கொலை காரியை பெற்றெடுத்த குடும்பமாக சந்தேகமே இன்றி பார்க படும் மன நிலையில்??? இப்படித்தான் சவுதியர்கள் களையபடும் தலைகளின் சொந்த காரர்களுடைய குடும்பங்களையெல்லாம் உலகமெங்கும் தேடி தேடி சென்று உதவுகிறார்களா???

    இந்த குடும்பம் சவுதி பணத்தை வேண்டாம் என்றது இந்த நூற்றாண்டு முடிந்தாலும் மறக்க முடியாத ஒரு அவமானமாகவே சவுதி அரச குடும்பதால் கருதபடும் மிக பெரிய அவமானம் அவர்களுக்கு???

    ReplyDelete
  5. ஹலோ யஹ்யா, உம்முடைய எமுத்துக்கள் ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய இறுதி நாள் அடையலங்களை ஞாபகப்படுத்துகிறது., சஊதி அல்ல மஹிந்த மூலமும் அல்லாஹ்தான் உதவினான் என்பதுதான் என்னுடைய முழு நம்பிக்கை அடுத்து நீயெல்லாம் ஏட்டுச்சுரக்காய்கள், ஆரம்பம் முதல் மர்ஹும் ரிஸானா விடயமாக வரும் எல்லா செய்திகளையும் வாசித்தமையினால் தான் மேலேயுள்ள கருத்தை பதிவு செய்தேன் வேறில்லை.எனக்கு வழிகாட்டி குர்ஆன் ஹதீஸ் மட்டுமே பணத்துக்கும்,பதவிக்குமாக அல்லாஹ்வின் தீனை விற்பவர்களிலிருந்து அல்லாஹ் என்னைப்பாதுகாப்பானாக. அத்துடன் அக்குடும்பத்துக்கு கிடைக்கக்கூடிய நலவுகளை உம்மைப்போன்றவர்களின் எழுத்துக்கள் தடுக்காமல் இருந்தால் போதும். மீதமுள்ள எத்தனையோ ரிஸானாக்கள் விடயத்தில் அக்கரை செலுத்துவதற்கு நானும் உம்மைப்போன்றவர்களும் ஈடுபடுவது சாலச்சிறந்தது என்பது என்னுடைய கருத்து.அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்துகொள்கிறேன்
    ahlastrd@gmail.com
    Seyed N Deen

    ReplyDelete
  6. அல்லாஹ்வின் தூதருக்கு ஸலவாத்தைகூட முழுமையாக சொல்ல திரானி அற்ற உம்மோடு கதைபதே ஒரு கேடு அல்ஹாஸ் !!! முதலில் சவுதியை பணிபெண் வியாபாரதை தடை செய்ய கோறும் அதனால் உமது உதவி இல்லாமலேயே மக்கள் மாற்று வழி தேட வழி பிறக்கும் அல்லாஹ் உம்மைபோன்ற ஏஜென்டுகளின் தீங்குகளில் ஒருந்து ஸ்ரீலங்காவையும் ஸ்ரீலங்கா மக்களையும் பாதுகாப்பானக

    ReplyDelete

Powered by Blogger.