Header Ads



ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை திட்டமிட்ட கொலைக்கு ஒப்பானது


திருகோணமலை - மூதூர் பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை, திட்டமிட்ட கொலைக்கு ஒப்பானது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு வெறும் கண்டம் தெரிவிப்பதால் மாத்திரம் பலன் இல்லை. 

அவர் மீதான குற்றச்சாட்டு, வழக்கு விசாரணை மற்றும் குறைந்த வயதில் அவர் தொழில்நிமித்தம் சவுதிக்கு அனுப்ப ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.