Header Ads



குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்ற 'பர்வேஸ் ரசூல்' கிரிக்கெட் வீரர் ஆகிறார்


(மறுப்பு)

மூன்றாண்டுகளுக்கு முன் பெங்களூரு "சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு" வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" அதே ஸ்டேடியத்தில் நட்சத்திர வீரராக வளம் வரவிருக்கிறார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருந்த "பர்வேஸ் ரசூல்" தற்போது, இந்தியா "A" கிரிக்கெட் டீ முக்கு தேர்வாகியுள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் டீமில் இடம் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக "ரஞ்சி டிராபி" ஆட்டத்தில் காஷ்மீரின் சார்பாக கலந்துக் கொண்ட பர்வேஸ், அதிரடியாக விளையாடி அனைவரையும்விட அதிகமாக 594 ரன்கள் எடுத்ததுடன் 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்து, இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து நிரபராதி என நிரூபித்து வெளிவர, அவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்ட வேதனைகளும்-சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

No comments

Powered by Blogger.