Header Ads



'கிழக்கு மண்' பத்திரிக்கை வெளியீடு (படங்கள் இணைப்பு)

(முஹம்மது நியாஸ்)

கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டு கிழக்குமண் எனும் செய்திப் பத்திரிகை வெளியீட்டு விழா (27.11.2012) மாலை 4 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். பழுலுல்லாஹ் தலைமையில் நடபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் MLAM .ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்,காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர்,காத்தான்குடி போலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு அதிகாரி டிங்கிரி பண்டார ஆகியோரும் ஆன்மீக அதிதிகளாக காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா தலைவர் SM.அலியார் பலாஹி,மட்டக்களப்பு மன்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோர் உட்பட கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுததந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி உட்பட அரசியல் கட்சி மற்றும் அரசியல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உயர் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 










No comments

Powered by Blogger.