Header Ads



இப்படியும் நடிக்கிறார்கள் - லண்டனில் சம்பவம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அம்ரிட்பால் மெஹட் என்பவர் லண்டன் மான்செஸ்டர் தபால் நிலையத்தில்  4,00,000 பவுண்ட் திருடியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்  நீதிமன்ற நடவடிக்கைகளின்போது கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஊமையாக நடித்துள்ளார். அவரது அமைதியில் சந்தேகம் அடைந்த நீதிபதி, சிறைக்கைதியான அவரை ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சிக்கிச்சை பெற உத்தரவிட்டார்.

அப்போது அந்த மனோதத்துவ மருத்துவரிடம் மெஹட் பஞ்சாபி மொழியில் முணுமுணுத்தது தெரியவந்தது. மருத்துவர் மற்றும் மெஹட் இருவரிடையே நடைபெற்ற உரையாடல் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் போட்டுக்காட்டப்பட்டது. அதைக்கேட்ட நீதிபதி 26 வயதான மெஹட் பிறவியால் ஊமையல்ல எனவும், தண்டனையிலிருந்து தப்பவே அவ்வாறு நடித்துள்ளார் எனவும் தீர்மானித்து, அவருக்கு 4 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தார்.

இது குறித்து மெஹட்டிடம் கேட்டபோது உண்மையிலேயே ஆன்மீகவாதியான தான் கைது செய்யப்பட்டவுடன் கடவுள் தன்னை ஒரு ஊமையாகவே மாற்றிவிட்டார் என்று கூறினார். கடந்த 2008-09 ஆண்டுகளில் தங்கள் குடும்பம் வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும், அதனை ஈடுகட்ட இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டதாகாவும் அம்ரிதா மெஹட் ஒத்துக்கொண்டார்.

No comments

Powered by Blogger.