July 22, 2012

விகாரையில் பாங்கு சொல்லி, நோன்பு திறந்து, தொழுகை நடாத்த பௌத்த தேரர்கள் அழைப்பு (படங்கள்)

அஷ்ரப் ஏ. சமத்

கொழும்பில் பிரபல மகாபோதி  பௌத்த விகாரையில் முஸ்லீம் அரசியலவாதிகள், புத்திஜீவிகள் ஜம்மியத்துல் உலா சபை மௌலவிமார்களை அழைத்து நோன்பு திறப்பதற்கு பௌத்த தேரர்கள் முஸ்லீம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நோன்பு திறப்பின்போது அவ் விகாரையில் அதாண் (பாங்கு) ஒலித்து தொழுகை நடத்துவதற்கும் பௌத்த  தேரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நோன்பு திறப்பதற்கான சிற்றுண்டிகள் மற்றும் கஞ்சி தயாரித்து வழங்குவதற்கும் தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வினை நோன்பு நடுப்பகுதியில் நடாத்துவதற்கும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் அடுத்த திணத்தில் பிரபல பௌத்த தேரர்களுக்கு கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பகல் உணவு வழங்குவதற்கு முஸ்லீம்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேற்படி அழைப்புக்கள்  மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் நேற்று(21) நடைபெற்ற பௌத்தம் இஸ்லாம் நட்புறவு அமைப்பின் கூட்டத்திலேயே தீர்மாணிக்கப்பட்டது.

இந் நிகழ்வு முன்னாள் அமைச்சர் இவ் அமைப்பின் இணைத் தலைவர் எம்.எச்.முஹம்மத் இணைத்தலைவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி கம்புறுகமகே தேரர், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இவ் அமைப்பின் இணைச் செயலாளர்கள் சீலா விக்கிரம , சாஹுல் ஹமீத் முகமத் மற்றும் உறுப்பினர்கள் ஐனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாச, பானலகல தேரர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இத் தீர்மாணம் எடுக்கப்பட்டது.

இப்புதிய அமைப்பின் கொள்கைகள் மற்றும் பௌத்தம் இஸ்லாம் மதங்கள் பற்றிய இலங்கையில் புரிந்துணர்வுகள் மதங்களுக்கிடையே பிரச்சினைகள் நடைபெறாமல் பாதுகாத்தல் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தல் போன்ற சட்டதிட்டங்கள் அடங்கிய வரைபு தயாரிக்கப்பட்டது.

இவ்அமைப்பு தம்புல்ல மற்றும் தெஹிவளை பள்ளிவாசல்களில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகே உறுவாக்கப்பட்டது. கடந்த மாதாத்தில் 4 சுற்ற வட்ட கூட்டங்கள் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முகம்மத் தலைமையில் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் மாதத்தில் ஐனாதிபதி பிரதமர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்து இவ் அமைப்பு பற்றி அவர்களுக்கு விளக்கமளிப்பதாகவும் கூட்டத்தில் தீர்மாணம் எடுக்கப்பட்டது.  அத்துடன் இச் அமைப்பின் தீர்மாணங்கள் சட்ட திட்டங்களுகளும் ஐனாதிபதி பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இணைச் செயலாளர் சாஹ-ல் ஹமீத் முகம்மத் தெரிவித்தார்.






14 கருத்துரைகள்:

இது உண்மையில்லே நல்ல விசயம் தான்,அதே போல் நோன்பு பெருநாளைக்கு பிறகு பௌத்த பிக்குஹளுக்கும் நல்ல எங்கள் முஸ்லிம் சாப்பாடுகளை கொடுக்கவும்.அனேக பௌத்த பிக்குஹளுக்கு எங்கள் முஸ்லிம் சாப்பாடுகள் நல்ல பிடிக்கும்.

இது சமூக நல் உறவுகளுக்கு வலுவூட்டும்...அழைப்பை ஏற்று செல்வோம் நோன்பு திறப்போம் ஆனால் உமர் ரலி வலி நின்று மாற்று
மத நிலையத்தில் தொழாமல் தவிர்ப்போம். பின் நாட்களில் தேவை இல்லாதாத பிரச்சினைகளை தவிர்ப்போம்.அதே போன்று டேவட்டகஹா பள்ளிக்கு அவர்களை அழைத்து சென்று இஸ்லாம் பற்றி தவறாகவும் எடுத்துக் கூறதிருப்போம்

What is this? New move for election? or tactic move for oncomming Geneva meeting? or Biriyani desire ? what you Colombo Muslim dont you know Islam and you dont have a policy and own way of living? this is toomuch.....

Goog goog. But When they pray at the wehara are they going to take those statues out side the wehara? And wesek come may be Muslim have to call them to come to mosque to do they festival. So are they wIll bring any statues to the mosque? When problem come look solution on the Quran or the prophet life. Don't use your brain.

தந்தூரி கோழியும் தம் புரியாணியும் தாராளமக பரிமாறலாம்.

Be alert, they will come with Loard Buddha statue and ask permission to have devil dance in side the mosque. Master plan careful

புத்தேர் சிலையினை பள்ளி வாசலுக்குள் கொண்டு போய் பெரஹர டான்ஸ் ஆட அனுமதி கேட்பான். கொஞ்சம் யோசிட்சு நோன்பு திறக்க போங்க , சரியா? பிறகு வருத்ட பட வேண்டாம்

நபியவர்களிடம் எல்லா விடையங்களிலும் அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்றால், அந்நிய மதத்தவர்களுடன் எப்படியான உறவுகளை கைகொள்ள வேண்டும், அதன் வரையறைகள்
என்ன என்பதனை நபியவர்களின் முன்மாதிரியிலிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும்.

தத்தமது புத்திக்கு ஏற்ற வகையில், மார்க்கத்தின் சார்பில் எடுக்கின்ற முடிவுகள் சிக்கலில் கொண்டு சென்று விடலாம். எந்த விடையத்திலும் இஸ்லாமிய வரையறைகளை மீறாமல் இருப்பதே நல்லது.

In my Opinion good move to enhance religious harmony.

silaikalukku munnal tholuthalum athu silai vananguvathu palalathan thavirthukolvathu nallathu

pansalaiyil ifthar ok, but pansalaiyil tholuwathu.... pinnar pallivaasalilum oru naalaikku pirith oathi poojai seiwoam enraal enna seiwathu...

அவர்கள் பவ்தவிகரையில் நோன்பு திறந்து, பாங்கு சொல்லி தொழுகை நடத்துமாறு அழைப்பார்கள் ஆனால் பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் இல்லத்துக்கு வந்து பன சொல்லி அவர்களின் மத கிரிகைகளை செய்ய வேண்டும் எண்டு கேட்டால் என்ன செய்வது? இறை நிராகரிப்பு வாதிகளை புனிதமான இறை இல்லதில் பன சொல்ல குடுக்க போறிங்களா? நீங்கள் அவர்களின் பவ்த விகாரைக்கு பொய் பாங்கு சொல்லி தொழுகை நடத்தினால் அவர்கள் எமது அல்லாஹ்வின் இல்லத்துக்கு வந்து பன சொல்ல நாம் இடமளிக்க மாட்டோம் இது பெரும் இனப்பிரச்சனையை தோற்றுவிக்கும்,

எனவே இவ்வாறன நிகழ்வுகளை பொது இடங்களில் நடத்துவது மிகவும் சிறந்தது.

this is a good approach to spread our islam but each and every steps carefully we have to move...normally most of the budhist friends don't like muslim people because of muslim brothers behaviours...

Post a Comment