Header Ads



உலகின் உண்மையான போர்க்குற்றவாளி அமெரிக்கா - மஹிந்த ராஜபக்ஸ

அமெரிக்காவே உண்மையான போர்க்குற்றவாளி என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கண்டியில்  புவி மணித்தியால நிகழ்வில் உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்கா மீது நேரடியான தாக்குதலைத் தொடுத்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர்,

“புவி வெப்பமடையக் காரணமான நாடுகளே உண்மையான போர்க்குற்றவாளிகள்.  புவி வெப்படைதலால், அனைத்து தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்து போகக் கூடும்.  புவி வெப்பமடையக் காரணமான நாடுகள் தான் உண்மையான போர்க்குற்றவாளிகள், மனித உரிமைகளை மீறியவர்கள்.

இந்த விதிகளை மீறுகின்ற வகையில் மேற்குலக நாடுகளே உள்ளன.  புள்ளிவிபரங்களின்படி, புவி வெப்பமடைதலுக்கு காரணமான மிகப்பெரிய நாடுகளில், முதலாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. புவி வெப்பமடைதலுக்கு அதன் பங்களிப்பு 25 வீதமாகும்“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.