Header Ads



முகம்மது நபி (ஸல்) வாழ்க்கை நூல் கைப்பிரதிப் போட்டி - அல் அஸுமத் முதலிடம்


தமிழ்நாடு, சென்னை, ரஹ்மத் அறக்கட்டளையினால் நடத்தப்பட்ட முகம்மது நபிகள் (ஸல்) வாழ்க்கை வரலாற்று நூலுக்கான கைப்பிரதிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அல் அஸூமத் முதற் பரிசைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

முகம்மது நபிகள் (ஸல்) வாழ்க்கை வரலாறு, முஸ்லிம் அல்லாதாரும் படிக்கும் வகையில் அழகுத் தமிழில் ஆய்வு நடையில் வரலாற்று ஆதாரங்களோடு எழுதப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்திருந்தது. 

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இப்போட்டியில் கவிஞர் அல் அஸுமதின் நூல் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.